மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக மாநகர சபையின் உதவித்திட்டம்.

இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு, வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக மாநகர சபையினால் சுமார் 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் மாநகர எல்லைக்குள் இயங்கும் 16 பாடசாலை மாணவர்களிற்கு அதிபர்கள் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது. அந்தந்தப் பாடசாலை அதிபர், ஆசிரியர் குழுக்களால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் இவைகள் பகிர்ந்தளிக்கபட்டதுடன், விஷேடமாக கரையோர பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும் முழுமையாக ௨ள்வாங்கப்பட்டது ஓர் சிறப்பம்சமாகும்.





Comments